மக்களை வேட்டையாடும் பாஜக - அதிமுக: உதயநிதி காட்டம்!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (16:39 IST)
சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
மத்திய அரசின் அறிவுறுத்தல்படி மாதம்தோறும் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த டிசம்பர் மாதத்திற்கு வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.660 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கூடுதலா ரூ.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில் இதனை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், 15 நாட்களில் ரூ.100 விலை உயர்ந்துள்ளது சிலிண்டர். இந்த நெருக்கடியான காலத்திலும் மக்களின் அடிப்படை தேவைகளை நசுக்கும் பாசிச போக்கை மத்திய அரசு கடைப்பிடிப்பதும், அடிமைகள் அதை வேடிக்கை பார்ப்பதும் வேதனை தருகிறது. மக்களின் வலிக்கு மருந்திடாமல் விலையேற்றம், விரோத சட்டம் என வேட்டையாடுவதை கண்டிக்கிறோம் என் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரைக்குச் செல்லத் தடை நீட்டிப்பு: மோசமான வானிலை காரணமாக நடவடிக்கை!

புயலால் இலங்கையில் சிக்கி தவித்த இந்தியர்கள்.. அதிரடியாக மீட்ட இந்திய விமானப்படை..!

சிலிண்டர் விலை 10 ரூபாய்க்கும் மேல் குறைவு.. வழக்கம்போல் வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை..!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை உயர்வு.. சென்செக்ஸ் 86000ஐ தாண்டி உச்சம்..!

ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.720 அதிகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments