Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழுச்சியை எடுபுடிகளால் அடக்க முடியாது... கைதுக்கு பின் உதயநிதி!!

Webdunia
சனி, 21 நவம்பர் 2020 (13:18 IST)
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாகையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இந்நிலையில் இன்னமும் கூட்டணிகளே முடிவாகாத நிலையிலும் திமுக தனது தேர்தல் பிரச்சார பணியை தொடங்கிவிட்டது. 
 
ஆம், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரச்சார பயணத்தை நேற்று முதல் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாகை மாவட்டம் திருக்குவளையில் துவங்கினார். 100 நாட்கள் தனது பிரச்சாரத்தை தமிழகம் முழுவதும் மேற்கொள்ளவுள்ளார். 
 
இந்நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில், உலக மீனவர் தினத்தையொட்டி நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராம மக்களை சந்திக்க சென்ற போது அடிமை அரசு மீண்டும் எங்களை கைது செய்துள்ளது. கயிறுகட்டி தடுக்க முடியாதது கடல். அதைப்போல கழகத்தின் எழுச்சியையும் எடுபுடிகளால் அடக்க முடியாது. 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' பிரச்சார பயணம் தொடரும் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments