Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு கட்டுப்பாடுகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் சாடல்!

Webdunia
ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (17:39 IST)
இன்று நடைபெற்ற நீட் தேர்வுகளில் கடைபிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

நாடு முழுவதும் இன்று மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வுகள் நடைபெற்றன. இந்நிலையில் மாணவர்களை நீண்ட நேரம் காக்க வைத்து மதிய உணவு கூட உண்ணவிடாமல் தேர்வுக்கு அனுப்பியதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுகுறித்து பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தன் சமூகவலைதளப் பக்கத்தில் ‘2 மணி தேர்வுக்குக் காலை 11-க்கே வந்துவிட வேண்டும். மதிய உணவு இல்லை. தமிழ் அறிவிப்பு இல்லை. கையுறைகூட குறிப்பிட்ட நிறத்தில். வெயிலில் பெற்றோர்-கழிப்பறை வசதியில்லை. நம் பிள்ளைகள் பாஸாகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே இன்றைய நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம். #BanNeet_SaveTNStudent’ எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments