Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனாதனம் குறித்து நான் பேசியதில் தவறும் இல்லை. சட்டப்படி சந்திப்பேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (14:35 IST)
சனாதனம் குறித்து நான் பேசியதில் எந்த தவறும் இல்லை, இதை நான் சட்டப்படி சந்திப்பேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தபோது அதில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட போது காவல்துறையினர் நடவடிக்கை  எடுத்திருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் தங்கள் கடமையை செய்ய தவறிவிட்டது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது விளக்கத்தை அளித்துள்ளார்

சனாதன கொள்கை குறித்து நான் பேசியதில் எந்த தவறும் இல்லை என்றும், அதிலிருந்து நான் பின்வாங்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் பேசாததை, பெரியார் பேசாததை, திருமாவளவன் பேசாததை நான் பேசவில்லை என்றும், என் கொள்கையில் நான் உறுதியாக இருப்பேன் என்றும், இதில் ஏதாவது பிரச்சனை வந்தால் அதை நான் சட்டப்படி சந்திப்பேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments