Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 எப்போது? அமைச்சர் உதயநிதி தகவல்..!

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (08:11 IST)
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் தேர்தல் முடிவடைந்து ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த நிலையில் நேற்று இரவு ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி பெண்கள் மனதில் உள்ள கோரிக்கை என்னவென்று எனக்குத் தெரியும் என்றும் குடும்ப தலைமை தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 இன்னும் அதிகபட்சம் ஐந்து மாதங்களுக்குள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 
பெண்களுக்கு மாதம் ரூ.1000 கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எடுத்து உள்ளார் என்றும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெறச் செய்யுமாறும் அவர் பொது மக்களை கேட்டுக் கொண்டார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments