Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கை சின்னத்திற்கு வாக்கு.. பிரதமர் மோடிக்கு வேட்டு.. உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

Mahendran
வெள்ளி, 29 மார்ச் 2024 (15:33 IST)
கை சின்னத்திற்கு வாக்கு போட்டால் பிரதமர் மோடியின் தலைக்கு வேட்டு வைக்கலாம் என திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் பணிகள் முடிவடைந்து தற்போது அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் இன்று திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பூத்திற்கு நீங்கள் சென்றவுடன் உங்களுக்கு தெரிய வேண்டிய ஒரே சின்னம் கை சின்னம் தான் என்றும் அந்த சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்து பிரதமர் மோடியின் தலைக்கு வேட்டு வைக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த நிலையில் திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிகாந்த் செந்தில், பாஜக சார்பில் பாலகணபதி, தேமுதிக சார்பில்  நல்ல தம்பி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜெகதீஷ் சுந்தர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். திருவள்ளூர் தொகுதியை பொருத்தவரை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலுவாக இருப்பதால் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மிக எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்று கூறப்படுகிறது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments