Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரமாரியான கேள்விகள்: பதிலளிக்க முடியாமல் திணறிய உதயநிதி: களோபரமான கிராமசபை கூட்டம்

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2019 (12:51 IST)
திண்டுக்கல்லில் திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்குபெற்ற உதியநிதி ஸ்டாலின் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறினார்.
திமுக தலைவர் மு க ஸ்டாலின் திமுக சார்பில் தமிழகம் எங்கும் கிராமசபைக் கூட்டங்களை நடத்திப் பங்கேற்று வருகிறார். சென்ற சட்டசபைத் தேர்தலின் போது நமக்கு நாமே சுற்றுப்பயணத்தின் மூலம் மக்களை சந்தித்த ஸ்டாலின் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிராமசபைக் கூட்டங்களைக் கையில் எடுத்துள்ளார். மாவட்ட வாரியாக கிராமசபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். 
 
இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலினின் மகன், உதயநிதி ஸ்டாலின் பங்குபெற்றார். இக்கூட்டத்தில் பங்குபெற்ற மக்கள் பலர் உதயநிதியை நோக்கி சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இத்தனை நாட்கள் எங்கே போனீர்கள். தேர்தல் நேரத்தில் தான் நாங்கள் உங்களின் கண்களுக்கு தெரிவோமா? நீங்கள் இதுவரை மக்களுக்கு என்ன நல்லது செய்தீர்கள் என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
 
பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் உதயநிதி திணறினார். விடாத பொதுமக்கள் மாறி மாறி சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். கட்சி நிர்வாகிகளும், உதயநிதியும் செய்வதறியாது திகைத்தனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments