Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மறுநாள் உதயநிதி அமைச்சராகப் பதவியேற்கிறார்!

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (21:32 IST)
நாளை மறுநாள் உதய நிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாக ஆளுனர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு  நடந்த சட்டசபை தேர்தலில், முக ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றன.

எனவே, முக ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றார். இவரது தலைமையிலான அமைச்சரவையில்,துரைமுருகன், அன்பில் மகேஷ், பிடிடி ஆர், சங்கரபாணி உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். 

ஆனால், திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதய நிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பேற்பாரா என்ற எதிர்பார்ப்பு  திமுகவினரிடையே ஏற்பட்ட நிலையில்,  விரைவில் அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்ற தகவல் வெளியானது.

ALSO READ: உதயநிதியை எதிர்த்துப் போட்டியிட்டால் சவுக்கு சங்கருக்கு ஆதரவு - சீமான்
 
இந்த  நிலையில்,   நாளை மறுநாள்(  டிசம்பர் 14 ஆம் தேதி), கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், காலை 9:30 மணியளவில்  உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாகவும் இளைஞர் நலன் திட்ட செயலாக்கத்துறை அவருக்கு ஒதுக்கப்பட உள்ளதாகவும்   தகவல் வெளியாகிறது.

மேலும், இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளதாக  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சர் ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

இனி தமிழ்நாட்டில் 8 மாதங்களுக்கு வெயில் காலம்தான்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments