Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் திருடிய பள்ளி மாணவர்கள் கைது!

பைக் திருடிய பள்ளி மாணவர்கள் கைது!

Webdunia
புதன், 2 நவம்பர் 2016 (21:49 IST)
சென்னை புழல் பகுதியில் பைக் திருடியதாக இரண்டு பள்ளி மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பத்து மற்றும் பதினோராம் வகுப்பு படித்து வருகின்றனர்.


 
 
நேற்று முன்தினம் புழல் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது தலைக்கவசம் இல்லாமல் பைக்கில் வந்த இரண்டு மாணவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறியுள்ளனர்.
 
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர், அதில் இருவரும் பைக் திருடி வந்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் இவர்கள் வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த மேலும் ஓர் திருட்டு பைக்க போலீசார் மீட்டனர்.
 
பள்ளியில் 10 மற்றும் 11-ஆம் வகுப்பு படித்து வந்த இந்த இரண்டு மாணவர்களையும் கைது செய்த போலீசார் சிறுவர் நீதிமன்ற குழுவின் முன்னர் ஆஜர்படுத்தியுள்ளனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments