Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா கூட்டத்தில் இரண்டு பேர் பலி - கருணாநிதி இரங்கல்

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (15:03 IST)
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விருத்தாசலத்தில் கலந்தகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் 2 பேர் பலியானதற்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”விருத்தாசலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக, ஆளுக்கு 300 ரூபாய் ரொக்கமும், பிரியாணி பொட்டலமும் கொடுத்து பல இடங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் பல மணி நேரம் வெயிலில் காத்திருந்த காரணத்தால், வெளியேற முயன்ற போது காவல் துறையினர் அவர்களை வெளியே விட மறுத்ததால், நெரிசலில் சிக்கி இரண்டு பேர் பலியாகி இருக்கிறார்கள்.
 
மேலும் 17 பேர் மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டுள்ளார்கள். நெரிசலில் சிக்கிப் பலியான இறந்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், மருத்துவமனையிலே சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
அதே நேரத்தில் இந்த விபத்துக்குக் காரணமான இந்த ஆட்சியினரின் காவல் துறையினரின் செயல்களுக்கு எனது கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments