Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுக் கூட்டத்துக்கு வராத 2 அமைச்சர்கள் – அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு !

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (11:12 IST)
அதிமுக அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வரும் நிர்வாகிகள் கூட்டத்தில் இரண்டு முக்கியமான அமைச்சர்கள் கலந்து கொள்ளாதது சலசலப்புகளை உருவாக்கியுள்ளது.

அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற ராஜன் செல்லப்பா பற்ற வைத்த தீ அதிமுகவில் தற்போது கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் அதிமுகவுக்குள் எழுந்துள்ள சலசலப்புகளை தீர்க்க சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கும் இந்த கூட்டம் சற்று முன்னர் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகிய இரண்டுபேரும் பங்கேற்காததால் அதிமுக அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments