கொரோனாவால் 12 பேர் இறந்துவிட்டார்கள் – வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்பியவர்கள் கைது !

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (11:05 IST)
சென்னையில் கம்பெனி லீவுக்காக வாட்ஸ் ஆப்பில் கொரோனா பற்றி வதந்தி பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலால் இந்தியாவில் இதுவரை 203க்கும் மேற்பட்டோர் பாதிக்க பட்டுள்ளனர். இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பூந்தமல்லியில் ’கொரோனா வைரஸால் 12 பேர் இறந்துள்ளனர். அதனால் பொதுமக்கள் போராட்டம் நடத்த உள்ளனர்’ என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. 12 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியானதால் பீதி உண்டானதை அடுத்து போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு அந்த வதந்தியைப் பரப்பியவர்களான காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பெஞ்ஜமின் மற்றும் சிவகுமார் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்கள் வேலை செய்யும் கார் கம்பெனியில் விடுமுறை அளிக்காததால் இப்படி செய்ததாக கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments