Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் 12 பேர் இறந்துவிட்டார்கள் – வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்பியவர்கள் கைது !

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (11:05 IST)
சென்னையில் கம்பெனி லீவுக்காக வாட்ஸ் ஆப்பில் கொரோனா பற்றி வதந்தி பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலால் இந்தியாவில் இதுவரை 203க்கும் மேற்பட்டோர் பாதிக்க பட்டுள்ளனர். இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பூந்தமல்லியில் ’கொரோனா வைரஸால் 12 பேர் இறந்துள்ளனர். அதனால் பொதுமக்கள் போராட்டம் நடத்த உள்ளனர்’ என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. 12 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியானதால் பீதி உண்டானதை அடுத்து போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு அந்த வதந்தியைப் பரப்பியவர்களான காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பெஞ்ஜமின் மற்றும் சிவகுமார் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்கள் வேலை செய்யும் கார் கம்பெனியில் விடுமுறை அளிக்காததால் இப்படி செய்ததாக கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments