Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு.. விண்ணப்பங்கள் பரிசீலனை

Siva
வெள்ளி, 5 ஜனவரி 2024 (13:39 IST)
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 2 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், இவர்களுக்கு வரும் 10ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், அதில் தற்போது 2 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
1.13 கோடி பேருக்கு கடந்த மாதம் உரிமைத்தொகை வழங்கப்பட்ட நிலையில், இம்மாதம் முதல் பயனாளிகளின் எண்ணிக்கை 1.15 கோடியாக அதிகரித்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற வேண்டிய பல பயனாளிகளின் பெயர்கள் விடுபட்டு உள்ளது என்று அதிருப்தி ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 2லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது மகளிர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் அம்பானி மோசடியாளரா? CBIயிடம் பகீர் புகாரளித்த SBI வங்கி!

முன்னாள் ஐசிஐசிஐ வங்கி சிஇஓ சந்தா கோச்சார் குற்றவாளி தான்; தீர்ப்பாயம் அதிரடி அறிவிப்பு..!

கைது செய்யாம இருக்க பணம் குடுங்க! ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் ரூ.50 லட்சம் வாங்கிய போலீஸ்!? - பகீர் குற்றச்சாட்டு!

சென்னையில் அதிகரிக்கும் டெங்கு: புள்ளிவிவரங்கள் எச்சரிக்கை!

முதல்வர் உடல்நலக்குறைவுக்கு என்ன காரணம்? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments