Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு.. விண்ணப்பங்கள் பரிசீலனை

Siva
வெள்ளி, 5 ஜனவரி 2024 (13:39 IST)
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 2 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், இவர்களுக்கு வரும் 10ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், அதில் தற்போது 2 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
1.13 கோடி பேருக்கு கடந்த மாதம் உரிமைத்தொகை வழங்கப்பட்ட நிலையில், இம்மாதம் முதல் பயனாளிகளின் எண்ணிக்கை 1.15 கோடியாக அதிகரித்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற வேண்டிய பல பயனாளிகளின் பெயர்கள் விடுபட்டு உள்ளது என்று அதிருப்தி ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 2லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது மகளிர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments