Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீதிபதி வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை : சென்னையில் அதிர்ச்சி

நீதிபதி வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை : சென்னையில் அதிர்ச்சி
, வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (16:56 IST)
சென்னையில் வசிக்கும் ஒரு பெண் நீதிபதி பெண் வீட்டில் கொள்ளையர்கள் கை வரிசை காட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சமீபகாலமாக,  தமிழகம் முழுவதும் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏராளமான திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.
 
பொதுமக்கள் வீட்டில் மட்டும் கொள்ளையடித்துக் கொண்டிருந்த திருடர்கள், ஒரு கட்டத்தில் பல உயர் போலீஸ் அதிகாரிகளின் வீட்டிலேயே தங்களின் கைவரிசை காட்டத் தொடங்கினர். சென்னையில் உள்ள போலீசார் குடியிருப்பின் உள்ளே புகுந்து திருடி, போலீசாரை அதிர்ச்சியடைய செய்தனர்.
 
தற்போது அதற்கும் ஒரு படி மேலே போய், நீதீபதிகள் வீட்டிலும் கொள்ளை அடிக்க ஆரம்பித்துள்ளார்கள். முதன்மை அமர்வு நீதிமன்ற கூடுதல் நீதிபதி ஸ்ரீஜா,  சென்னையை சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
 
இவர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமாரை எப்படி வீடியோ எடுக்க வேண்டும்?, எடுத்த பின்னர் என்ன செய்ய வேண்டும்?: நீதிமன்றம் நிபந்தனை