Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவானி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி!

Erode Velusamy
வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (13:21 IST)
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அருகில் உள்ள நன்செய் புளியம்பட்டியில் பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழிந்துள்ளனர். 
நன்செய் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் 6 பேர் பவானி ஆற்றிற்கு குளிக்கச் சென்றுள்ளனர். இந்த மாணவர்களில் சிலருக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், ஆற்றில் நீர்வரத்து குறைவாக இருந்துள்ளதால் மாணவர்கள் முன்னேறிச் சென்று குளித்துள்ளனர். அப்போது ஆற்றின் சேற்றில் சிக்சிய மாணவர்கள் இரண்டு பேரால் மேலெழும்ப முடியாமல் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 
 
உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு மாணவர்களை தேடும் பணி தீவிரமடைந்தது. சற்று நேரத்திற்கு முன்னதாக இரண்டு மாணவர்களின் உடல்களும் கைப்பற்றப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 
 
இதனையடுத்து அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments