Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் 2 பேர் பரிதாப பலி: சென்னையில் சோகம்!

Webdunia
சனி, 10 டிசம்பர் 2022 (13:21 IST)
சென்னையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
 
சென்னையில் நேற்று மான்டஸ் புயல் கரையை கடந்ததை அடுத்து பல மரங்கள் வேரோடு சாய்ந்தாகவும் ஒருசில மின் கம்பங்களும் விழுந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வேரோடு விழுந்த மரங்களையும் மின்கம்பங்களையும் சீரமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் விடிய விடிய ஈடுபட்டு வருகிறார்கள். 
 
தற்போது சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் சென்னை மடிப்பாக்கத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த லட்சுமி மற்றும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதனையடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு சென்ற மீட்பு படையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அதன்பின் மின்கம்பியை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோக சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments