Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் முக்கிய பகுதிகளில் 2 நாட்கள் குடிநீர் சப்ளை நிறுத்தம்.. என்ன காரணம்?

Siva
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (09:14 IST)
சென்னை தேனாம்பேட்டை உள்பட முக்கிய பகுதிகளில் இன்றும் நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையின் பல பகுதிகளில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது என்பதும் வேறு சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் மெட்ரோ பணி காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் அதாவது வளசரவாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அம்பத்தூர், ஆலந்தூர், அடையாறு ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

நாளை இரவு 9 மணி வரை குடிநீர் வினியோகம் இருக்காது என்றும் மெட்ரோ பணி முடிந்ததும் நாளை இரவு 9 மணிக்கு மேல் குடிநீர் வினியோகம் வழக்கம்போல் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகளில் இரண்டு நாட்கள் குடிநீர் விநியோகம் இல்லை என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments