Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய பெண்ணுக்கு 2 நாட்கள் காவல்: நீதிமன்றம் உத்தரவு..!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (17:32 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய பெண்ணுக்கு இரண்டு நாட்கள் காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் திருடியதாக ஈஸ்வரி என்ற பெண் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஆவணங்கள் நகைகள் உட்பட பல விலை உயர்ந்த பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
 
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய ஈஸ்வரி மற்றும் டிரைவர் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்திடம் காவல்துறையினர் அனுமதி கேட்டனர் 
 
இந்த மனு மீது விசாரணை இன்று நடைபெற்ற போது இரண்டு நாட்கள் காவலில் எடுத்து இருவரையும் விசாரிக்க நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments