Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்! வேதாரண்யம் பகுதியில் ஆச்சரியம்..!

Mahendran
திங்கள், 6 மே 2024 (17:05 IST)
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் அதில் இந்த தேர்வு எழுதிய இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்று இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்த நிலையில் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது என்பதும் வழக்கம் போல் மாணவிகள் அதிக சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக 94 சதவீதத்திற்கும் அதிகமாக மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. 
 
இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பிளஸ் டூ தேர்வு எழுதிய இரட்டையர்கள் இருவருமே ஒரே மதிப்பெண் பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பஞ்ச நதிக்குளம் மேற்கு விக்டரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த இரட்டையர்களான நிகில் மற்றும் நிர்மல் ஆகிய இருவரும் 478 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரே பள்ளியில் படித்த இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருப்பது ஆசிரியர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைனின் 4 கிராமங்களை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம்.. மக்கள் வெளியேற்றப்பட்டார்களா?

6 மணி நேரம் 583 பேருடன் தொடர்ந்து ஜல்சா..! அடுத்த நொடி கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த சோகம்!

தவெகவினர் ட்ரெண்ட் ஆவதற்காக இப்படி செய்கிறார்கள்!? - வியாசர்பாடி சம்பவம் குறித்து காவல்துறை விளக்கம்!

சென்னை கேளிக்கை பூங்கா ராட்சத ராட்டினத்தில் கோளாறு.. 3 மணி நேரம் அந்தரத்தில் 30 பேர்..!

வங்கக்கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழகத்தில் இன்று ஆரஞ்சு அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments