சிறப்புப் புலனாய்வு குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் தவெக மேல்முறையீடு..!

Mahendran
புதன், 8 அக்டோபர் 2025 (11:16 IST)
கரூர் துயர சம்பவம் குறித்து விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு குழுவை அமைத்துள்ள நிலையில், அந்த குழுவின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்திய போது, இடிபாடுகளில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய ஏற்கனவே தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வு குழுவை அமைத்தது.
 
இந்த நிலையில், கரூர் துயர சம்பவத்தை விசாரிக்க உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீடு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேக வெடிப்பா? ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா விளக்கம்..!

உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில் பயங்கர கொள்ளை: மன்னர் நெப்போலியன் நகைகள் திருட்டு!

சென்னை, மதுரை உட்பட 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

நட்சத்திர விடுதியில் 19 வயது இளைஞன் வைத்த மதுவிருந்து.. தொழிலதிபர் அப்பாவை கைது செய்த போலீசார்.

டிரம்ப் எங்களுக்கு அதிபராக வேண்டும்.. வீதியில் இறங்கிய போராடும் அமெரிக்க மக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments