Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000-க்கு மேல் மது குடித்தால் ஃப்ரிட்ஜ், எல்இடி டிவி பரிசு: சென்னையில் பகீர்!!

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2018 (13:27 IST)
சென்னையில் தீபாவளியை முன்னிட்டு 1000-க்கு மேல் மது குடித்தால் ஃப்ரிட்ஜ், எல்இடி டிவி பரிசு என்று பிளக்ஸ் அடித்து விளம்பரப்படுத்திய பார் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக்கில் குடிமகன்கள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. வருடாவருடம் தீபாவளியன்று டாஸ்காக் கலெக்‌ஷனில் பல கோடிகளில் புரளும் தமிழக அரசு இந்த தீபாவளிக்கும் டார்க்கெட் ஃபிக்ஸ் பண்ணியுள்ளார்களாம்.
 
இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டாஸ்மாக் கடையின் விளம்பரம் பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்த விளம்பர பேனரில் 1000-க்கு மேல் மது அருந்தினால் ஃப்ரிட்ஜ், எல்இடி டிவி, வாஷிங் மெஷின் பரிசு என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இதனைப் பார்த்த குடிமகன்கள் ஆயிரம் ரூபாய்க்கு குடித்துவிட்டு, ரோட்டில் செல்வோரை வம்பிழுத்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு தெரியவரவே அவர்கள் பாரின் மேலாளரை கைது செய்தனர். மேலும் பாரிலிருந்த பரிசுப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

திருமலை கோயிலில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. கோவில் தேவஸ்தானம் எச்சரிக்கை..!

ரூ.15,000 சம்பளம் வாங்கிய அரசு அலுவலகருக்கு ரூ.30 கோடிக்கு மேல் சொத்து.. சோதனையில் அதிர்ச்சி..!

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

அடுத்த கட்டுரையில்
Show comments