Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் ஒரு காதல் அரங்கேற்றம்; மாணவனுடன் ஓட்டம் பிடித்த டுடோரியல் கல்லூரி ஆசிரியை

மீண்டும் ஒரு காதல் அரங்கேற்றம்; மாணவனுடன் ஓட்டம் பிடித்த டுடோரியல் கல்லூரி ஆசிரியை
, திங்கள், 20 ஏப்ரல் 2015 (20:08 IST)
டுடோரியல் கல்லூரி ஆசிரியை ஒருவர், பள்ளி மாணவன் ஒருவருடன் ஏற்பட்ட காதலினால் இருவரும் ஓட்டம் பிடித்துள்ளனர்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (16) என்ற மாணவனுடன், நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ஆசிரியை கோதைலெட்சுமி (26) என்ற ஆசிரியையும் காதலித்து தலைமறைவாயினர். இந்நிலையில், திண்டுக்கல்லில் 18 வயது மாணவனை 21 வயதுடைய ஆசிரியை காதலித்து ஓட்டம் பிடித்துள்ளனர். 

 
திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடியை சேர்ந்த சதீஸ்குமார் (18) என்ற மாணவர் கடந்த ஆண்டு நடந்த பிளஸ் - 2 தேர்வில் தமிழ் பாடத்தை தவிர மற்ற அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்துள்ளார். இதனால் திண்டுக்கல்லில் உள்ள ஒரு டுடோரியல் கல்லூரியில் சேர்ந்து பயின்று வந்துள்ளார்.
 
அதே டுடோரியல் கல்லூரியில், முத்தழகுபட்டியை சேர்ந்த செபாஸ்டின் சாரதி (21) எனபவர் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பிறகு இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.
 
மேலும் விடுமுறை தினங்களிலும் வகுப்பு இருப்பதாக கூறி பெற்றோரை ஏமாற்றி வெளியூர்களுக்கும் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த காதல் அரங்கேற்றம் வீட்டிற்கு தெரியவர இருவரது வீட்டிலும் கண்டித்துள்ளனர். ஆனாலும், இருவரும் நெருங்கிப் பழகியே வந்துள்ளனர்.
 
இந்நிலையில், வேலைக்கு சென்ற செபாஸ்டின் சாரதி இரவு வெகுநேரமாகியும் வீடுதிரும்பாததால், அவரது தந்தை டுடோரியல் சென்று விசாரித்தார். அப்போதுதான் மாணவர் சதீஸ்குமாருடன் ஆசிரியை ஓடியிருப்பது தெரியவந்தது. இது குறித்து தேவராஜ் திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil