Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: உச்ச நீதிமன்றத்தில் 28ம் தேதி விசாரணை

Webdunia
வெள்ளி, 25 மே 2018 (17:50 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த தூப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான சமப்வத்தின் மீது தொடரப்பட்ட பொதுநல மனு வரும் 28ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

 
 
ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தூத்துகுடியில் நடந்த  போராட்டத்தில்  போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இணையதள சேவைகள் முடக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு நிலைமை வெகுவாக சீரடைந்து வருகிறது.
 
இந்த தூப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் தூப்பாக்கி சூடு தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் சிபிஐ தலைமையில் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
 
இந்த மனுவை இன்று அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம். வரும் 28ம் தேதி இந்த வழக்கின் விசாரனையை ஒத்திவைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments