Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு .. அரசுக்கு உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

Siva
செவ்வாய், 18 ஜூன் 2024 (19:42 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சுட்டிக்காட்டிய அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
 
இறுதி அறிக்கை நிராகரிக்கப்பட்டதால், கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஒருவர் புதிய வழக்கை தாக்கல் செய்தார் 
 
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கை மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது என்றும் தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார் 
 
இதனை அடுத்து மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை ஜூலை ஒன்றாம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments