Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டியூசன் படிக்க வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரிப் பேராசிரியர்

Webdunia
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2014 (09:44 IST)
நாகை மாவட்டம், குத்தாலத்தில் டியூசன் படிக்க வந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

குத்தாலம் ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் 50 வயதுடைய கிருஷ்ணராஜூ. இவர் பூம்புகாரில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த கல்லூரியில் பொருளியல் துறை தலைவராகவும் உள்ளார்.

இவரது மனைவி பிரசன்ன லட்சுமி, குத்தாலத்தில் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். கிருஷ்ணராஜூ வின் மனைவி பிரசன்ன லட்சுமி நடத்தி வரும் பள்ளி வளாகத்தில் மாலை நேரங்களில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவு மாணவ-மாணவிகளுக்கு கிருஷ்ணராஜூ டியூசன் எடுத்தார்.

அங்கு படித்துவந்த மாணவிகளிடம் பேராசிரியர் கிருஷ்ணராஜூ சில்மிஷம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குத்தாலம் அஞ்சாறுவார்த்தலை பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய  9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் கிருஷ்ணராஜூ சில்மிஷம் செய்துள்ளார்.

அத்துடன் மாலை 6 மணிக்கு மேல் நீ மட்டும் இங்கேயே இருக்க வேண்டும் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த மாணவி வீட்டுக்கு சென்றவுடன்  இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கிருஷ்ணராஜூவை கைது செய்தனர். பின்னர்அவர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!