Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவுக்காக காத்திருக்கும் தலைவர் பதவி: டிடிவி பேட்டி!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (13:34 IST)
சசிகலாவுக்காக அமமுக தலைவர் பதவி காலியாக வைக்கப்பட்டுள்ளது என டிடிவி தினகரன் பேட்டி. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி தீவிரமான தேர்தல் பணிகள் இறங்கியுள்ளது. இந்நிலையில் இன்று அமமுகவின் கூட்டம் காணொளி வாயிலாக நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
 
எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினரனை முதல்வர் இருக்கையில் அமர செய்வதே லட்சியம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்த எந்த முடிவையும் எடுக்க டிடிவி தினகரனுக்கு முழு அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. 
 
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், 3வது அணி இல்லை. அமமுக அமைக்கும் அணிதான் முதல் அணி. எங்களது கட்சியுடன் தேசிய, மாநில கட்சிகள் கூட்டணி அமைக்குமா என்பது குறித்து இப்போது கூற முடியாது. 
 
கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என அமமுகவினர் விரும்புகின்றனர். சசிகலா சட்டப்போராட்டம் நடத்தி வருவதால் அவருக்காக அமமுக தலைவர் பதவி காலியாக வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

தெருவில் விளையாடிய 2 வயது குழந்தை.. ஆட்டோ மோதியதால் பரிதாப பலி.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments