Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது ஆஃபீசு.. புது அரசியல் ஸ்கெட்சு.. கலக்குறே டிடிவி!

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (16:12 IST)
சமீப காலமாக தீவிர அரசியலில் ஈடுபடமல் இருந்த அமமுக மீண்டும் கலத்தில் புது உற்சாகத்துடன் இறங்கியுள்ளது. 
 
கடந்த 2019 ஆம் நாடளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கு பின்னர் அமமுக தோல்விகளாளும் நிர்வாகிகளின் விலகளாலும் துவண்டுபோய் இருந்தது. இதனிடையே டிடிவி தினகரன் முதற் உற்சாகமாக சென்னை இராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தை திறந்துவைத்தார். 
 
அதன் பின்னர் தற்போது, 2021 சட்டமன்ற தேர்தலில் அமமுக தலைமையில் பெரிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் சசிகலா சிறையிலிருந்து விடுதலையாவார் என்றும், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று கூறியுள்ளார்.
 
இதனால் தொண்டர்களும் நிர்வாகிகளும் புது தெம்பை பெற்றுள்ளனர். அதோடு, சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் அமமுக சார்பில் குறைந்தது 10 எம்.எல்.ஏ.க்களை உருவாக்க வேண்டும் என்பதே தினகரனின் குறிகோளாக உள்ளதாம். 
 
முன்பை போல எல்லாவற்றிற்கும் ஆசைபடாமல் எம்மால் என்ன முடியுமோ அதை பெற தினகரன் முயற்சி செய்கிறார். இந்த மாற்றம் கட்சியினருக்கு புது நம்பிக்கையையும் கொடுத்துள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments