Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமியின் அழைப்பிற்காக காத்திருக்கும் தினகரன்...?

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2017 (11:44 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விரைவில் சந்திப்பார் எனத் தெரிகிறது.


 

 
ஓ.பி.எஸ் அணி தங்களோடு  இணைய வேண்டும் என்பதற்காக, அதிமுக கட்சி விவகாரங்களில் இருந்து சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் அறிவித்த சூழலில், இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் டில்லி புழல் சிறையில் அடைக்கப்பட்டார் தினகரன்.  
 
அதன் பின் ஜாமீனில் வெளியே வந்த அவர், இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதற்காகத்தான் நான் கட்சி பணிகளில் இருந்து விலகியிருந்தேன். ஆனால் இப்போதுவரை அது நடக்கவில்லை. எனவே, நான் கட்சி பணியில் மீண்டும் ஈடுபடுவேன் என கூறினார். அதைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் 32 பேர் அவரை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
 
ஆனால், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்லாமல், தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். அமைச்சர்களின் எதிர்ப்பு காரணமாகவே அவர் அங்கு செல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், முதல்வர் எடப்பாடியின் அழைப்பிற்காக அவர் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments