Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குருட்டு யோகத்தில் தவழ்ந்து வந்து... ஈபிஎஸ்-ஐ கலாய்த்த டிடிவி!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (11:25 IST)
குருட்டு யோகத்தில் தவழ்ந்து வந்து பதவி பெற்றவர் பழனிசாமி என டிடிவி தினகரன் பேட்டி. 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டபின் நேற்று பெங்களூரிலிருந்து சென்னை வந்தடைந்தார். வரும் வழியில் அவருக்கு ஏராளமான அமமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
 
இந்நிலையில் சென்னை வந்ததும் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 24 மணி நேரம் பயணம் செய்ததில் சசிகலா உடல் நிலையில் எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்.
 
மக்கள் மனதில் சசிகலா எந்த தவறும் செய்யவில்லை என்பதுதான் இருக்கிறது, அதற்கு சாட்சிதான் இந்த இருபத்தி நான்கு மணி நேர வரவேற்பு. எங்களைப் பார்த்து, முதலமைச்சர், துணை முதலமைச்சர் பயப்படவேண்டாம் நாங்கள் அவர்களைப் போல் குறுக்கு வழியில் செல்ல மாட்டோம். 
 
ஆளுமை என்கிற வார்த்தைக்கே அதிமுகவில் இடமில்லை. குருட்டு யோகத்தில் தவழ்ந்து வந்து பதவி பெற்றவர் பழனிசாமி. ஜெயலலிதா நினைவிடத்தை திறந்தவுடன் சசிகலா அங்கு செல்வார் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

வங்கக்கடலில் ரீமால் புயல்.. 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்திவைப்பு

வங்கக் கடலில் 'ரீமால்' புயல் எதிரொலி: தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

8 நாட்களுக்கு பின் குற்றாலத்தில் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments