Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனின் ஃபோகஸ் கவுன்சிலர் பதவி: ஃபுல் ஸ்விங்கில் தொண்டர்கள்!

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (17:07 IST)
டிடிவி தினகரன் உள்ளாட்சி தேர்தலுக்காக ஃபுல் ஸ்விங்கில் தனது தொண்டர்கள் அனைவரையும் களமிறக்கவுள்ளாராம். 
 
அதிமுக பிளவு, சசிகலா தண்டனை ஆகியவற்றால் புதிதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார் தினகரன். தனது ஆதரவாளர்களுடன் ராஜாவாக இருந்த தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சி, திமுக ஆகியவற்றைத் தோற்கடித்து நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்தார். 
 
ஆனால் அதன் பின்னர் அடுத்தடுத்து எடுத்த நடவடிக்கைகளால் அவரது கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர். பலர் கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். மக்களவை மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் அமமுகவுக்குப் பேரிடியாக விழுந்துள்ளது.
ஆனால் தற்போது அவர் இந்த தோல்விகளில் இருந்து மீண்டெழுந்து அடுத்த கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஆம், உள்ளாட்சி தேர்தலுக்கான வியூகங்களை அமைத்து தொண்டர்களை களமிறக்கியுள்ளாராம். 
 
அதிலும் குறிப்பாக இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத்தேர்தலில் அமமுக எந்தெந்த தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றதோ அந்த தொகுதிகள் மீது உள்ளாட்சி தேர்தலில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், அந்த தொகுதியில் கவுன்சிலர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்றும் மும்முறமாக செயல்ப்பட்டு வருகிறாராம். 
 
அந்த வகையில், சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உள்பட தென் மாவட்டங்களையும், தஞ்சை, திருச்சி ஆகிய டெல்டா மாவட்டங்களும் தினகரனின் ஃபோகஸில் உள்ள தொகுதிகளாம். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments