Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாம் புரட்சி தலைவர்: டிடிவி தினகரன் அட்ராசிட்டி!

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (16:42 IST)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுக கட்சி நிலையற்று கிடக்கிறது. முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இணைந்து கட்சியையும் ஆட்சியையும் நடத்தி வருகின்றனர். 
 
சசிகலாவின் சகோதரரான டிடிவி தினகரன் கட்சியையும் ஆட்சியையும் மீட்பேன் என கூறி புதிய கட்சி ஒன்றை துவங்கி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். 
 
இந்நிலையில், கட்சியின் தலைமை அலுவலகத்தை சென்னை அசோக் நகரில் சமீபத்தில் திறந்தார். அவர் மீதுள்ள அதிருப்தியில் அலுவலக திறப்பு விழாவை சில முக்கியமானோர் புறக்கணித்தனர். 
 
ஆனாலும், இவை எதையும் வெளியில் காட்டமல் தினகரன் வழக்கம் போல் தனது பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். மேலும், கட்சியின் நிர்வாகிகளுக்கு சில உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறாராம். 
 
அதாவது, கட்சி விழாக்கள் மற்றும் பொதுக் கூட்டங்களிள் தினகரன் கலந்துகொள்ளும் போது, அவரை வரவேற்று அழைக்கும் போஸ்டர்களிலும், பேனர்களிலும், 'இரண்டாம் புரட்சி தலைவரே! என குறிப்பிடும்படி கட்டளையிட்டுள்ளாரா. 
 
இனி தினகரன் கட்சி சார்ப்பில் அடிக்கப்படும் போஸ்டர் மற்றும் பேனர்களில் இரண்டாம் புரட்சி தலைவரே என்பதை அடிக்கடி பார்க்ககூடும். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments