Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறையினர் எல்லாம் காந்தியின் பேரன்களா? டிடிவி தினகரன் கேள்வி!

Webdunia
வியாழன், 31 மே 2018 (16:41 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று ரஜினிகாந்த் அங்கு சென்று மக்களை சந்தித்து அதன் பின்னர் பேட்டி அளித்தது தற்போதைய விவாத பொருளாக மாறியுள்ளது. 

 
 
சமூக விரோதிகள்தான் கலவரத்திற்கு காரணம் என தமிழக அரசு மற்றும் ரஜினி கூறியதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஆர்கே நகர் எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் இதுகுறித்து பேசவுள்ளார். 
 
அப்போது அவர் கூறியதாவது, திமுக உறுப்பினர்கள் சட்டசபையை புறக்கணிக்காமல், சபைக்கு வர வேண்டும். எதிர்க்கட்சிகள் இல்லாமல் சட்டசபையை நடத்துவது முதல்வருக்கு அழகல்ல. 
 
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அரசு வெளியிட்டிருக்கும் அரசாணை பலவீனமானது. உடனடியாக இதனை எதிர்த்து தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
 
தூத்துக்குடியில் சமூக விரோதிகள் போராட்டத்தில் புகுந்ததாலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் எல்லாம் என்ன சமூக விரோதிகளா? இல்லை காவல்துறையினர் எல்லாம் காந்தியின் பேரன்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்.. புளித்துப் போன நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம்! அன்புமணி

பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து.. வரவேற்று பேசிய நயினார் நாகேந்திரன்..!

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: கடந்த 11 ஆண்டுகளின் வளர்ச்சிப் பாதைக்கான வரைபடம்.. அமித் ஷா பாராட்டு

பிரதமர் மோடியின் கனவு: இந்திய இளைஞர்கள் சொந்த சமூக ஊடகங்களை உருவாக்க வேண்டும்!

ஒரே வாரத்தில் 1000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments