உதயநிதி பேசியது தவறு..ஆனால் தலைக்கு விலை வைப்பது காட்டுமிராண்டித்தனம்: டிடிவி தினகரன்..!

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (12:35 IST)
சனாதனம் குறித்து உதயநிதி பேசியது தவறு என்றும் ஆனால் அதே நேரத்தில் ஒரு அமைச்சரின் தலைக்கு விலை வைப்பது என்பது காட்டுமிராண்டித்தனம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் பேட்டி அளித்துள்ளார்.
 
 இன்று செய்தியாளர்களை டிடிவி தினகரன் சந்தித்தார். அப்போது உதயநிதியின் சனாதனம் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த அவர் மத உணர்வை பாதிப்பது போல் உதயநிதி பேசியது தவறு என்றும் சனாதனம் என்பது என்னவென்று தெரியாமல் பேசி உள்ளார் என்று தெரிவித்தார். 
 
ஆனால் அதே நேரத்தில் அமைச்சர் தலைக்கு விலை வைப்பது காட்டுமிராண்டித்தனம் என்றும் கூறினார்.
 
மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமாகாது என்றும் அவர் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்தார். 
 
மேலும் தீய சக்தி ஜெயித்து விடக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம் என்றும் அதனால் தான் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட திட்டமிட்டு இருப்பதாகவும் 40 தொகுதிகளில் நாங்கள் தனியாக போட்டியிடுவோம் என்றும் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments