Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னிப்பு கேக்க வேண்டியது ஓபிஎஸ்தான்.. நாங்க இல்ல..! – குட்டி ஸ்டோரிக்கு டிடிவி தினகரன் பதிலடி!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (13:12 IST)
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஓ.பன்னீர்செல்வம் சொன்ன குட்டிக்கதைக்கு டிடிவி தினகரன் பதில் அளித்துள்ளார்.

அதிமுகவில் இருந்த சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கிற்காக சிறை சென்ற நிலையில் அவர் கட்சியின் பொது செயலாளர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். தற்போது விடுதலையாகி வந்த சசிகலா தான் மீண்டும் அதிமுகவை மீட்பேன் என பேசி வருகிறார்.

இந்நிலையில் சசிக்கலாவை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் அதிமுகவினருக்குள்ளேயே இரு வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இந்த நிலையில் அதிமுகவின் கிறிஸ்துமஸ் விழாவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம் குட்டிக்கதை ஒன்றை சொல்லி “மனம் திருந்தி வருபவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வதுதான் தலைமைக்கு அழகு” என பேசியுள்ளார். 

இதுகுறித்து பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் “தவறு செய்தவர்கள் யார் என்பது மக்களுக்கே தெரியும். ஓ.பன்னீர்செல்வம்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏற்கனவே செய்த தவறுகளால்தான் போலீஸை கண்டு ஓடி ஒளிகின்றனர்” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments