Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா நினைத்திருந்தால் நான் முதல்வர் – டிடிவி தினகரன் அதிரடி !

Webdunia
புதன், 8 மே 2019 (12:53 IST)
தேர்தல் பிரச்சாரத்துக்காக சூலூர் சென்றுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சசிகலா நினைத்திருந்தால் நான் முதல்வராகி இருப்பேன் எனக் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாக உடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் சசிகலா தலைமையில் மற்றொரு அணியும் உருவாகியுள்ளது. இதில் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை எடப்பாடி அணியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இப்போது மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் பிரச்சாரத்துக்காக சூலூர் சென்ற டிடிவி தினகரன் ‘ முதல்வர் இறந்த பிறகு சசிகலா நினைத்திருந்தால் நான் முதல்வர் ஆகியிருப்பேன். ஆனால் கொங்குமண்டலத்தை சேர்ந்தவரான பழனிச்சாமி துரோகம் செய்யமாட்டார் என நம்பி அவரை முதல்வர் ஆக்கினார். ஆனால் அவர் கட்சிக்கும் மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டார். பாஜகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார்’ எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments