இரட்டை இலை இல்லையென்றால் டெபாசிட் போயிருக்கும்: டிடிவி தினகரன்

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2023 (13:18 IST)
இரட்டை இலைஇல்லையென்றால் அதிமுகவுக்கு டெபாசிட் போய் இருக்கும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் போது செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் தென்னரசு மிகவும் கஷ்டப்பட்டு தான் டெபாசிட் தொகையை பெரும் அளவுக்கு வாக்குகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வி குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறிய போது திமுகவுக்கு நிகராக அதிமுகவினரும் பணம் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டார்கள் என்றும் இரட்டை இலை சின்னம் கிடைத்தும் அவர்கள் படுதோல்வி அடைந்திருப்பது பார்க்கும்போது இரட்டை இலை சின்னம் இல்லை என்றால் டெபாசிட் போய் இருக்கும் என்றும் தெரிவித்தார். 
 
ஆட்சி அதிகாரம் இருந்தபோது திமிர் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதால் தான் மக்கள் வெறுப்பின் காரணமாக அதிமுக தோல்வி அடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். துரோகத்தினால் வளர்ந்து வரும் இந்த கட்சி கட்சிக்கு காலம் தான் பதில் சொல்லும் என்றும் காலம் நிச்சயம் அவர்களுக்கு தகுந்த தண்டனையை கொடுக்கும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
 
 அதிமுக தலைவர்களை வசப்படுத்தி வைத்திருப்பதாலோ தொண்டர்கள் எல்லோரும் என் பின்னால் தான் இருக்கின்றார்கள் என்று சொல்வதாலோ எடப்பாடி பழனிச்சாமி ஒரு தலைவராக முடியாது என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 550 இண்டிகோ விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்டு அறிக்கை..!

டிட்வா புயல் கரையை கடந்த பின்னரும் மீண்டும் மழை.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. !

பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசின் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments