Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வாக்கு: டிடிவி தினகரன் பேட்டி..!

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (11:38 IST)
ஈரோடு இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து வரும் 12ஆம் தேதி முடிவு செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
இன்று தஞ்சையில் பேட்டி அளித்த டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து பன்னிரண்டாம் தேதிக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என கூறினார்.,
 
மேலும் அதிமுக தற்போது பிராந்திய கட்சியாக மாறி உள்ளது என்றும் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை இரட்டை இலை சின்னம் அதன் செல்வாக்கை இழக்கும் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு 5000 முதல் 10,000 வாக்குகள் மட்டுமே பெற முடியும் என்றும் இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் படுதோல்வி அடைவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments