Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா உணவகங்களில் கட்டணமில்லா உணவு வழங்குங்கள்! – அரசுக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்!

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (12:09 IST)
தமிழகத்தில் அதிகம் கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் நிலையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு அளிக்க வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தலைநகரான சென்னை மற்றும் அதன் அருகே உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் ஜூன் 19 முதல் 30 வரை இந்த பகுதிகளில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ” மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அம்மா உணவகங்களில் கட்டணம் ஏதுமின்றி உணவு வழங்க வேண்டும்.” என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் “ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் ஜூன் 30 ஆம் தேதி வரையிலும் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதைத் தொடர்ந்தால்தான் வேலையிழப்பால் பாதிக்கப்பட்டிருக்கிற தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments