Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தலுக்கு தயாராகும் டிடிவி தினகரன் ஜெயானந்துக்கு பதிலடி

Webdunia
ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (20:24 IST)
பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று கூறிய ஜெயானந்துக்கு அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

 
திருப்பரங்குன்றம் தொகுதியில் வெகு நாட்களாக இடைத்தேர்தல் நடக்காமல் உள்ளது. திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ. திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததால் இரு தொகுதியிலும் இணைந்தே இடைத்தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
திமுக இரு தொகுதிகளையும் கைப்பற்ற தீவிரமாக உள்ளது. ஏற்கனவே ஜெயலலிதா மறைவால் நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
 
தற்போது திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட தயாராகி வருகிறார். திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதி தேர்தல் குறித்து பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்ற ஜெயானந்த் திவாகரன் கூறியிருந்தார்.
 
இதற்கு டிடிவி தினகரன், கத்துக்குட்டிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல தேவையில்லை. இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலம் விமர்சகர்களுக்கு பதில் அளிப்போம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments