Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக அரசை கண்டித்து அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (12:44 IST)
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம். 

 
காவிரி அணையின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூபாய் 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
மேகதாதுவில் புதிய அணை கட்டக் கூடாது என தமிழக அரசு பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் கர்நாடக அரசை கண்டித்து டிடிவி தினகரன் தலைமையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய, மாநில அரசுகள் மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையா?

முதுநிலை ஆசிரியர் தேர்வு எப்போது? 2025ஆம் ஆண்டின் அட்டவணை வெளியீடு..!

எம்பிக்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments