Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்லூர் ராஜு மட்டுமே நன்றியுள்ளவர்: நெகிழும் டிடிவி தினகரன்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (16:10 IST)
அமமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அமைச்சர் செல்லூர் ராஜு மட்டுமே இன்னும் கொஞ்சம் நன்றியோடு இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். 
 
சமீபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுகவில் விரைவில் பெண் தலைமை ஆட்சி ஏற்படும் என கூறியிருந்தார். இது குறித்து தினகரன் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, 
 
அதிமுகவில் விரைவில் பெண் தலைமை ஏற்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது, சரியானதுதான். மற்ற அமைச்சர்கள் நன்றியை மறந்து செயல்படுகின்றனர். ஆனால், அமைச்சர் செல்லூர் ராஜூ மட்டும், இன்றும் கொஞ்சம் நன்றியோடு இருக்கிறார்.
 
இப்போதும், அதிமுக ஒரு பெண்ணின் தலைமையில்தான் செயல்படுகிறது. அதை தெரிந்துதான், செல்லூர் ராஜூ அவ்வாறு கூறியிருப்பார். தமிழக முதலமைச்சரை மாற்ற வேண்டும். 
 
அதோடு, குற்றப் பின்னணி உள்ள, தவறுகள், ஊழல்கள் செய்கின்ற அனைத்து அமைச்சர்களையும் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ஆட்சியை தூய்மைப்படுத்த வேண்டும். கட்சியை பலப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments