Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதாகரனை சந்தித்து பேசிய தினகரன் - சிறையில் பாசப் போராட்டம்

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2017 (15:27 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தனது சுதாகரனை நேற்று சந்தித்து பேசியுள்ளது தெரியவந்துள்ளது.


 

 
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் சிறைக்கு சென்ற தினகரன் சமீபத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அதைத் தொடர்ந்து, அவருக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் 32 பேர் ஆதரவு தெரிவித்தனர். அதன் அந்த எண்ணிக்கையில் 2 கூடி தற்போது அவருக்கு 34 பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், கடந்த 5ம் தேதி பெங்களூர் அக்ராஹார சிறையில் உள்ள சசிகலாவை அவர் நேரில் சந்தித்து பேசினார். ஆனால், அப்போது, அதே சிறையில் இருக்கும் தனது சகோதரர் சுதாகரனை அவர் சந்திக்கவில்லை எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், அவர் நேற்று மீண்டும் பெங்களூர் சென்றார். ஆனால், இந்த முறை அவர் சசிகலாவை சந்திக்கவில்லை  என்றும் சுதாகரனை பார்த்து சுமார் 40 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது. இதை கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தியும் உறுதி செய்துள்ளார். மேலும், மற்றொரு நாள் அவர் மீண்டும் அங்கு சென்று சசிகலாவை சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments