Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாலையில் வீடு புகுந்து கைது: டிடிவி கண்டனம்!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (13:34 IST)
எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசியவர் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் கண்டனம். 

 
தமிழக எதிர்க்கட்சி தலைவரை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கார் மீது செருப்பு வீசியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவல்லிக்கேணியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தான் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசியவர் என்பது வீடியோ ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.  
 
இதனைத்தொடர்ந்து அவரை அண்ணா சதுக்கம் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசியவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. 
 
இந்நிலையில் இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, அதிகாலையில் வீடு புகுந்து கழக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம்! வன்முறையைத் தூண்டும் பழனிசாமி அண்ட் கம்பெனிக்கு ஆதரவாக செயல்படுகிறதா காவல்துறை? 
 
இது வண்மையாக கண்டிக்கத்தக்கது. கழக நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். உள்நோக்கத்தோடு வன்முறையை தூண்ட முயற்சிக்கும் பழனிச்சாமி அண்ட் கம்பெனிக்கு தமிழக காவல்துறை துணை போவதன் மர்மம் என்ன? என கேட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments