Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் வாக்குச்சாவடியில் திமுகவுக்கு அதிக ஓட்டா ? – வெளியானது உண்மை !

Webdunia
சனி, 25 மே 2019 (09:15 IST)
எடப்பாடி பழனிச்சாமியின் ஊரில் திமுக , அதிமுகவை விட அதிக வாக்குகள் பெற்றதாக நேற்று மதியம் சமூகவலைதளங்களில் தவறான செய்தி பரவியது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக ஒரு தொகுதியை தவிர அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொகுதியான சேலத்திலும் திமுகவே வெற்றி பெற்றது. மக்களவை தேர்தல் அன்று முதல்வர் அவரது எடப்பாடி தொகுதிக்குட்பட்ட சிலுவம்பாளையத்தில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். இந்நிலையில் சிலுவம்பாளையம் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வை விட திமுக 800 வாக்குகள் அதிகம் பெற்றதாக் செய்திகள் நேற்று வெளியாகின.

இதனால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர். ஆனால் உண்மையில்  அந்த வாக்குச்சாவடியில் மொத்தமே 900 வாக்குகள் பதிவானதாகவும் அதில் அதிமுக 679 வாக்குகள் பெற்றதாகவும் திமுக 221 வாக்குகள் பெற்றதாகவும் உணமைத் தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments