Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைக்கிளில் சென்ற ஹெல்மெட் போடாத மாணவனை போலீஸ் பிடித்ததா?? உண்மை பின்னணி என்ன?

Arun Prasath
புதன், 18 செப்டம்பர் 2019 (15:44 IST)
சைக்கிளில் சென்ற மாணவன் ஹெல்மெட் போடவில்லை என்பதால் போலீஸார் சைக்கிளை கைப்பற்றியதாக பரவிய செய்தியின் உண்மை தன்மை தற்போது வெளிவந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், ஹெல்மெட் போடாமல் சைக்கிளில் சென்றதால்,  ஒரு மாணவனின் சைக்கிளை கைப்பற்றினர் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது.

இந்நிலையில் இந்த செய்தியின் உண்மை தன்மை தற்போது தெரியவந்துள்ளது. அதாவது போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 7 ஆம் வகுப்பு மாணவன், அந்த சாலையில் தனது சைக்கிளிலிருந்து கைகளை விட்டு ஓட்டியபடி அடிக்கடி சென்றுள்ளான். ஆதலால் தான் அவனது சைக்கிளை போலீஸார் கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஏரியூர் இன்ஸ்பெக்டர் பாபு, கைகளை விட்டபடி சைக்கிள் ஓட்டியதால் மாணவனின் பாதுகாப்பு கருதியும் அந்த மாணவனுக்கு எச்சரிக்கை தருவதற்காகவும் சப் இன்ஸ்பெக்டர், மாணவனின் சைக்கிளை பிடித்து வைத்திருந்ததாகவும், பின்பு அரை மணி நேரம் கழித்து அனுப்பி வைக்கப்பட்டார் என்றும் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சைக்கிளில் ஹெல்மெட் போடாமல் சென்ற மாணவரின் சைக்கிளை கைப்பற்றிய செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments