Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

Sinoj
புதன், 7 பிப்ரவரி 2024 (19:26 IST)
தமிழக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து தொழிற்சங்கங்கள், 15வது  ஊதிய ஒப்பந்தம், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர்.

இதையடுத்து, பேச்சுவார்த்தை  நடத்திக் கொள்ளும்படி, போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதையடுத்து, 2 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று, சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தொழிலாளர் நல இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யூ, அண்ணா தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி உள்ப்ட 27 தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு போக்குவர்த்து கழக மேலாண் இயக்குகர்களும் பங்கேற்றனர்.

ஆனால், இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லாம் நன்மைக்கே: அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு குறித்து ஓபிஎஸ் ஒரே வரியில் பதில்..!

கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் எதுவும் பேசவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

நகை பறிப்பு சம்பவங்கள்! ஈரானி கும்பல் யார்? சென்னையை குறி வைத்தது எப்படி?

கோடை விடுமுறை சுற்றுலா... இலவசமாக அரசு பேருந்தில் செல்வது எப்படி?

மணிக்கு 160 கி.மீ வேகம்.. கோவை, சேலம், விழுப்புரம்..! - வருகிறது புதிய மித அதிவேக மெட்ரோ ரயில்!

அடுத்த கட்டுரையில்
Show comments