Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 கிமீ ஊர்வலமாக செல்லும் உஷாவின் உடல்: மக்கள் கண்ணீர் அஞ்சலி

Webdunia
வெள்ளி, 9 மார்ச் 2018 (11:39 IST)
நேற்று முன் தினம் இரவு திருச்சியில் போக்குவரத்து காவலர் ஒருவர் தாக்கியதால் உயிரிழந்த உஷாவின் இறுதி ஊர்வலம் சற்றுமுன் தொடங்கியது.

உஷாவின் உடல் இறுதி ஊர்வலமாக 7 கிமீ எடுத்து செல்லப்படுகிறது. சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் நின்று உஷாவுக்கு தங்கள் இறுதியஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்த ஊர்வலத்தில் உஷாவின் உடல் வைக்கப்பட்டுள்ள அலங்கார வண்டியில் உட்கார்ந்து செல்லும் அவருடைய கணவர் ராஜா, கதறியழுவது கல்நெஞ்சையும் கரைய வைக்கும் வகையில் உள்ளது. ‘கடவுளே உனக்கு இரக்கம் இல்லையா’ என்று வழிநெடுகிலும் கதறிய கதறல் இருபுறங்களிலும் நின்றிருந்த பொதுமக்களை கண்ணீர்க்கடலில் மூழ்க வைத்துள்ளது.

முன்னதாக உஷாவின் உடலுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் அஞ்சலி செலுத்தி உஷாவின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். உஷாவின் உடல் இன்னும் சில மணி நேரங்களில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments