Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி சிறப்பு முகாமில் ஈழத் தமிழர் தம்பதிகள் தற்கொலை முயற்சி

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (02:11 IST)
திருச்சி சிறப்புமுகாமில் ஈழத்தமிழர் தங்கவேலு மகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
திருச்சி சிறப்புமுகாமில் ஈழத்தமிழர் தங்கவேலு மகேஸ்வரன் கடந்த மூன்று ஆண்டுகளாக அடைக்கபட்டு உள்ளார். இவரது கோரிக்கையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் இவரை விடுதலை செய்ய பரிந்துரை செய்துள்ளது. ஆனால், சில காரணங்களை கூறி, அவரை விடுதலை செய்ய காவல்துறை மறுத்துவிட்டதாம்.
 

 
இந்த நிலையில், அவரது மனைவி திரசாந்தி, அவரது கணவர் தங்கவேலு மகேஸ்வரனை பார்க்க வந்துள்ளார். அப்போது, இருவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனையடுத்து, சுயநினைவு அற்ற நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர்கள் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் .அவர்கள் இருவரும் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை..!

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பள்ளி மாணவர்களின் பழைய பஸ் பாஸ் செல்லும? போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் லாட்டரி விற்பனை படுஜோர்.! ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது..!!

குளியலறையில் இருந்த 35 பாம்பு குட்டிகள்.! அலறிய வீட்டின் உரிமையாளர்..!!

Show comments