Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சியில் ரெளடி படுகொலை.. தலை துண்டிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு..!

Mahendran
சனி, 14 செப்டம்பர் 2024 (09:58 IST)
திருச்சியில் தலை துண்டிக்கப்பட்டு ரெளடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சீனிவாசன் மகன் சுந்தர்ராஜன் என்ற 33 வயது நபர் காவல் நிலையத்தில் ரெளடி பட்டியலில் இருப்பவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் நேற்று அவரது சித்தப்பா மணி என்பவரது வீட்டில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு இருந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவெறும்பூர் காவல் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ரெளடி சுந்தரராஜன் உடலை கைப்பற்றிய பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

முதல் கட்ட விசாரணையில் முந்தைய நாள் இரவு மணி வீட்டில் மொட்டை மாடியில் சுந்தர்ராஜன் சிலருடன் மது அருந்தியதாகவும் அப்போது தகராறு ஏற்பட்டதாகவும் தொழில் போட்டியின் காரணமாக ஏற்பட்ட அந்த தகராறின் போது சுந்தர்ராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் அவருடன் மது அருந்தியவர்கள் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சி அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரம்.! தலையிட கோரி பிரதமர் - ஜனாதிபதிக்கு மருத்துவர்கள் கடிதம்..!!

சூடுபிடிக்கும் சட்டமன்ற தேர்தல்..! ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி நாளை பரப்புரை..!!

சிறைகளால் என்னை பலவீனப்படுத்த முடியாது.! தேச விரோத சக்திகளுக்கு எதிராக போராடுவோம்.! கெஜ்ரிவால்...

மக்கள் பிரச்சனைகளில் எந்த வித ஈடுபாடும் விஜய்க்கு இல்லை.. கம்யூனிஸ்ட் கட்சி தாக்கு..!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் ஒருநாள் மட்டும் ரத்து.. எந்த நாள்? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments