Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரில் ஓட்டியவர் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்த போலீஸ்

Webdunia
ஞாயிறு, 3 டிசம்பர் 2017 (18:04 IST)
திருச்சியில் கார் ஓட்டி வந்தவர் ஹெல்மெட் அணியவில்லை என போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதனையடுத்து திருச்சி மாநகரம் முழுவதும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் காவல்துறையினர் திருச்சியை அடுத்துள்ள கல்லனை அருகே வேங்கூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த சகாய ஜெயராஜ் என்பவரிடம் சோதனை செய்துள்ளனர். ஆவணங்கள் அனைத்து சரியாக இருந்துள்ளது. 
 
இருந்தாலும் அவர் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவல்துறையினரின் வாகன சோதனையால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments